மழை நீரை சேமிக்க..
ஒவ்வொரு ஊரிலும், கிராமங்களிலும் மழை நீரை தேக்கி வைக்கும் விதத்தில்,
குளம், குட்டைகளை பராமரித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் எராளமான
இடங்களில் தடுப்பு அணைகள், குட்டைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை புதியதாக
உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் மழை காலத்தில் நமக்கு கிடைக்கும் மழைநீரை ஒரு துளி கூட வீணாக்காமல் சேமித்து வைத்து நிலத்தடி நீரை பெருக்கி கொள்ளவேண்டும்.
நிலத்தடி நீர் வளத்தை மாசுபடுத்தி கெடுக்கும், அல்லது சுரண்டும் எந்த
தொழிலாக இருந்தாலும், அதனால் எத்தனை கோடிகள் வருமானம் வருவதாக இருந்தாலும்
தடை செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத தொழில்களுக்கு நிலத்தடி நீரை
பாதுகாக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஏற்றுகொள்ள செய்யும்
விதத்தில் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மீறுவோருக்கு கடும் சிறை
தண்டனைகள் கிடைக்கும் விதத்தில் சட்ட விதிகள் திருத்தபடவேண்டும்.
மனிதன் உயிர் வாழ நீரும், உணவும் மிக முக்கியம். பணம், கார், பங்களா,
ஆடம்பரமான வாழ்க்கை வசதிகள், ஆறு வழி சாலைகள் இல்லாமல் கூட உயிர் வாழ்ந்து
விடலாம். ஆனால் நிலத்தடி நீர் தீர்ந்து விட்டால், மாசுபட்டு கெட்டு
விட்டால், விவசாயம் அழிந்து விட்டால், பசிக்கும் வயிற்றுக்கு கட்டு கட்டாக
ரூபாய் நோட்டுக்களை தீனியாக போட முடியாது. தாகம் எடுத்து வறண்டு கெஞ்சும்
நாக்குக்கு பன்னாட்டு குளிர்பானங்களை கொடுத்து திருப்தி படுத்த முடியாது.
தொழில்வளம், பொருளாதார வளர்ச்சி முக்கியம்தான். ஆனால் அதற்காக இயற்க்கை
வளங்களை அளித்துதான் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்றால் அந்த தொழில்
வளர்ச்சியை வைத்து கொண்டு எதிர்காலத்தில் மனிதனுக்கு நீர், உணவு தர முடியாது.
நீர்நிலைகள், குளம் குட்டைகளில் அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்களை
உருவாக்குவதை தடை செய்ய வேண்டும்.
வணக்கம் தங்களுடைய வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைப்பார்வையிடவும். வாழ்த்துகள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/08/6.html